வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: ஞாயிறு, 11 மே 2014 (16:59 IST)

ஐபிஎல் இறுதிப்போட்டி பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது

ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் (ஜூன் 1 ஆம் தேதி) நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
 
7 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதன் இறுதிப் போட்டி ஜூன் 1 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பையில் இருந்து மாற்றப்பட்டது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் (ஜூன் 1 ஆம் தேதி) நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. மாற்றத்துக்கான காரணம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானத்தில் 3 கேலரிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி தடையில்லா சான்றிதழ் வழங்க மாநகராட்சி மறுத்துவிட்டது.
 
இதனால் சென்னையில் போட்டியை நடத்த முடியாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து சென்னையில் நடக்க இருந்த 4 போட்டிகளும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
 
மே 18, 22 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் நடக்க இருந்த இரு ‘லீக்’ ஆட்டம் ராஞ்சிக்கும், முதலாவது தகுதி சுற்று ஆட்டம் (மே27) கொல்கத்தாவுக்கும் வெளியேற்றுதல் (மே.28) சுற்று ஆட்டம் மும்பைக்கும் மாற்றப்பட்டுள்ளது.