1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Modified: வியாழன், 3 ஏப்ரல் 2014 (18:47 IST)

இலங்கை 5 ஓவர்களில் 43/2

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கை மே.இ.தீவுகளுக்கு எதிராக அபாரமாக துவங்கியுள்ளது. 4 ஓவர்களில் 41 ரன்கள். குஷல் பெரேரா சன்டோகி பந்தில் பவுல்டு ஆனார்.

ஜெயவர்தனே 0- வில் ரன் அவுட் ஆனார். தில்ஷன் அடிக்க தாமதமாகத் துவங்கி பந்து ஃபேஸ் செய்யாமலே ரன் அவுட்.
 
தில்ஷன், குஷால் பெரேரா துவங்கினர். மே.இ.தீவுகளின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் சாமுயேல் பத்ரியை 2 ஓவர்களில் 20 ரன்கள் விளாசித் துவங்கினர்.
 
குஷல் பெரேரா மிட் ஆஃபில் பெரிய சிக்சரை அடிக்க, முன்னதாக தில்ஷன் நடந்து வந்து லாங் ஆஃபில் ஒரு சிக்சர் அடித்தார்.
 
குஷல் பெரேரா தற்போது சன்டோகியை ஒரு சிக்சருக்குத் தூக்கினார். அபாரத் துவக்கம். குஷால் பெரேரா 11 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 26 ரன்னில் அவுட். தில்ஷன் 15  நாட் அவுட். சங்கக்காரா இறங்கியுள்ளார்.