வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (16:29 IST)

’ஜிவாவின் சிரிப்பு என் வாழ்க்கையை மாற்றிவிட்டது’ - தோனி நெகிழ்ச்சி

தனது மகள் ஜிவாவின் சிரிப்பு தன் வாழ்க்கையை மாற்றிவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
 
இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு பெண் குழந்தை பிறந்தபோது, இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாடி கொண்டிருந்தது. குழந்தை பிறந்தபோது பேசிய தோனி, ‘எனது மகளைவிட இந்தியாவின் வெற்றிதான் முக்கியம்’ என்று கூறி அங்கேயே இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார்.
 
உலகக் கோப்பை போட்டித் தொடர் முடிந்த பிறகே, தனது மகளை பார்த்தார். பின்னர் அந்த குழந்தைக்கு ‘ஜிவா’ என்று பெயர் சூட்டியுள்ளார். தற்போது தோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அப்போது போட்டியைக் காண தனது மனைவி மற்றும் குழந்தையையும் அழைத்து வருகிறார்.
 

 
தற்போது இது குறித்து கூறிய கேப்டன் தோனி, ”எனது மகள் பிறந்த போது நான் இந்தியாவில் இல்லை. இதனால் அவளை பார்க்கவில்லை. அது கடினமான காலகட்டமாக இருந்தது. உங்களது குழந்தை சிந்தும் அன்பான புன்னகை, உங்களது வாழ்க்கையே மாற்றிவிடக்கூடும்.
 
நான் இந்திய அணிக்கோ அல்லது சென்னை அணிக்காககோ விளையாடுவது குறித்தெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. அவள் அழுவதற்கு விரும்புகிறாள். அதனால் அவள் அழுகிறாள். இது மிகச் சிறந்த உணர்வை அளிக்கிறது’ என்றார்.

டிவிட்டரில் மேலிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ‘முதன்முதல் எனது உடைமாற்றும் அறையில்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.