1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2015 (09:47 IST)

ஐபிஎல் தொடரில் பிரகாசித்து மீண்டும் இந்திய அணியில் இணைவேன்: யுவராஜ் சிங்

ஒரு  காலத்தில் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக ஜொலித்து வந்த யுவராஜ் சிங், வரும் ஐபிஎல் போட்டிகளில் அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
 

 

 
2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் தனது அதிரடி ஆட்டம் மூலம் பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்று தந்தவர் யுவராஜ் சிங். மேலும் அத்தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றவர் ஆவார். இப்படி அதிரடி ஆட்டத்தின் மன்னனாய் விளங்கிய யுவராஜ் சிங்கிற்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தகுந்த சிகிச்சை பின் தற்போது புற்றுநோய் பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டுள்ளார், யுவராஜ் சிங்.
 
இந்நிலையில் ஐபிஎல் போட்டி குறித்து டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் பேசுகையில், புற்றுநோய் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் தகுதியுடன் நலமாக உள்ளேன். மேலும் வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணிக்கு திரும்புவேன் என்றார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி யுவராஜ் சிங்கை ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.