1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (12:11 IST)

2015 உலக கோப்பையில் யுவராஜ் இடம்பெறுவது கடினம்: சவுரங் கங்குலி

11 வது உலக கோப்பை போட்டி வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அத்தொடரில் இந்திய அணியின் யுவராஜ்சிங் பங்குபெறுவது கடினம் என சவுரங் கங்குலி கூறியுள்ளார்.
இதுகுறித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி கூறுகையில், வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் யுவராஜ்சிங், ஷேவாக் போன்ற வீரர்கள் இடம் பிடிப்பது கடினமான செயல் ஆகும்.
 
மேலும் இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் ஆவர். எனினும் அவர்களுக்கான நேரம் இதுவில்லை என்று நான் நினைக்கிறேன். வரும் உலக கோப்பையில் கோலி, ரெய்னா ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார்.