1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2015 (13:42 IST)

உலகக் கோப்பை: சச்சினின் யூகம் பலித்தது

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சினின் அரை இறுதி கணிப்பு அவர் எண்ணியது போலவே நிகழ்ந்துள்ளது.
 

 
11 ஆவது உலகக் கோப்பை மகுடத்தை எந்த அணி வெல்லும் என ஊடகங்கள் சச்சினிடம் கருத்து கேட்டது. இதுகுறித்து சச்சின் கூறுகையில், அவ்வாறு குறிப்பிட்டு எந்த ஒரு அணியையும் சொல்ல முடியாது என்றார். எனினும் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா போன்ற அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்று கூறினார்.
 
தற்போது சச்சின் கூறியது போலவே அந்த 4 அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி அண்ணிய மண்ணில் தோற்ற போதிலும் இந்திய வீரர்கள் மீது சச்சின் அதிக நம்பிக்கையுடன் இருந்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறாது என்று சச்சின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.