1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2015 (17:51 IST)

கங்குலியின் சாதனையை முறியடிப்பார விராட் கோலி?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கொல்கத்தா கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி, கோலியின் ஆக்ரோஷத்தை விரும்புவதாகவும் தனது சாதனையை வீராட் கோலியால்தான் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது முதல், டெஸ்ட் அணியின் கேப்டன் கோலியை பல முன்னாள் வீரர்கள் அதிகமாக பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கொல்கத்தா கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி, கோலியின் ஆக்ரோஷத்தை தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்குலி கூறுகையில் தான் கோலியின் மிகப் பெரிய ரசிகர் எனவும் கேப்டன் பதவியில் எப்போதுமே வெற்றி பெற வேட்கையில் அவர் இருக்கிறார். அவரது இந்த ஆக்ரோஷத்தை நான் விரும்புகிறேன். கேப்டன் பதவியில் சில சமயம் தோற்கலாம். சில சமயம் வெற்றி பெறலாம். என்னை விட சிறந்த கேப்டனாக வீராட் கோலி உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடும் போதுதான் அவரது கேப்டன் பதவிக்கு முக்கிய சவாலாக இருக்கும். தென்ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாட அவரை வாழ்த்துகிறேன். கேப்டன் பதவியில் எனது சாதனையை வீராட் கோலியால்தான் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.