வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2015 (21:11 IST)

தொலைக்காட்சி பேட்டியை பாதியில் நிறுத்திவிட்டு வந்து சச்சினை கட்டி தழுவிய மேக்ஸ்வெல் (வீடியோ)

மெல்பர்ன் நகரில்  நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 வது முறையாக ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது.
 

 
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவரையும் அங்குள்ள டெலிவிஷன் சானல்கள் பேட்டி கண்டன. அப்போது இந்திய கிரிக்கெட் அணியில் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பரிசளிப்பு விழாவுக்கு ஐசிசி நிர்வாகிகளுடன் மைதானத்திற்குள் சென்று கொண்டிருந்தார்.
 

அப்போது தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்த 26-வயது நிரம்பிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளேன் மேக்ஸ்வெல் பேட்டியை அப்படியே விட்டுவிட்டு வந்து சச்சின் கையைக் குலுக்கி கட்டித் தழுவினார். அதன் பின்னர் தொடர்ந்து பேட்டி அளிக்க சென்றார். இந்த நெகிழ்ச்சியான காட்சியைப் பார்த்தவர்கள் வியந்தனர்.
 
இந்த வீடியோ  யூடியூபில் வெளியாக லட்சகணக்கான பேர் பார்த்துள்ளனர். இப்போது மட்டுமல்ல எப்போதும் மேக்ஸ்வெல் சச்சினிடம் மிகுந்த மரியாதை உடைவர் என்பதை நிருபித்துள்ளார்.