வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2016 (16:56 IST)

'டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்' - சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை

டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் - சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி 20 உலகக்கோப்பைப் போட்டியை, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
 

 
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மார்ச் 13ஆம் தேதி அன்று இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், “டி 20 உலக கோப்பையை வெல்ல நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நமது அணி நல்ல நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். அணி சீனியர், ஜூனியர் என சம அளவில் நல்ல கலவையில் உள்ளது. அவர்கள் அனைவரும் ஒரு அணியாக திறமையுடன் விளையாடக் கூடியவர்கள்.
 
ஜாஸ்பிரிட் பும்ரா ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய விதம் அருமையாக இருந்தது. அதேபோல மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். எல்லாருமே அப்படித்தான். இந்த அணி ஒரு வலிமை மிக்க கலவையாகத்தான் உள்ளது. இதனால், இந்திய அணி எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.
 
ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கின்றனர். இறுதி டி20 போட்டியில் கடைசிபந்தில் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இந்த ஆட்டத்தை மனைவியும், மகனும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது கொஞ்சம் வெளியே இருந்தேன்.
 
அவர்கள், வெற்றிக்கு கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்படுகிறது என்று கூறி என்னை அழைத்தனர். அப்போது, ‘நாம் இரண்டு ரன்களை எடுப்போம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என நான் சொன்னேன். ரெய்னா அற்புதமாக அடித்து வெற்றிபெற வைத்தார்” என்று கூறியுள்ளார்.