வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (11:34 IST)

கோலி, அனுஷ்கா சர்மாவை கலாய்க்கும் சமூக வலைதளங்கள்

நேற்று நடந்த அரை இறுதி போட்டியில் கோலியின் மோசமான ஆட்டம் காரணமாக அனுஷ்கா சர்மாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
 
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி  1 ரன்னில் அவுட்டாகி மைதானத்தில் இருந்த அனுஷ்கா சர்மாவை மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றினார்.
மேலும் இப்போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. எனினும் தற்போதைய சூழலில் பலி ஆடு போல் சிக்கியிருப்பது துணை கேப்டன் கோலியும், அவரது காதலி அனுஷ்கா சர்மாவும் தான். களத்தில் கோலியின் அதிரடி ஆட்டத்தை கண்டு ரசிக்கவே சிட்னி மைதானத்திற்கு பறந்து வந்தார் அனுஷ்கா சர்மா. 
 
ஆனால் ஆஸ்திரேலியாவின் வேகத்தில் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சமூக வலைதளங்களில் கோலியை கலாய்த்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் ஒரு விளம்பரத்தில் அனுஷ்கா ஷர்மா கோலியை 5 நிமிடத்தில் வரவில்லை என்றால் சென்று விடுவேன் என்ற காட்சி இடம்பெறும்.  அந்த விளம்பரத்தை வசை பாடி கோலி 5 நிமிடத்தில் ஆட்டமிழந்து விட்டதாக சமூக வலை தளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது.