வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (12:01 IST)

இந்திய கிரிக்கெட் வீரர் பாலியல் புகாரில் கைதா? - ஜிம்பாப்வேயில் பரபரப்பு

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியதாக வெளியான சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
இது குறித்து அங்குள்ள ஊடகங்கள், ‘ஜிம்பாப்வேயில் உள்ளூர் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால், ஜிம்பாப்வேக்கான இந்திய தூதர் ஆர்.மசாக்கு கைது செய்யவிடாமல் தடுக்க முயற்சித்ததாகவும்’ செய்திகள் வெளியிட்டன.
 
ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து கூறியுள்ள இந்திய அணியின் நிர்வாகம், “இந்த தகவல் முற்றிலும் தவறானது. இந்த சம்பவத்தில் எந்த வீரருக்கும் தொடர்பு இல்லை” என்று தெரிவித்துள்ளது.
 
ஆனால், இந்தியா- ஜிம்பாப்வே தொடரின் விளம்பரதார நிறுவனம் ஒன்றின் நிர்வாகி தான் கற்பழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது. இவர் தங்கி இருந்த அதே விடுதியில் இந்திய வீரர்களும் தங்கி இருந்ததால் குழப்பம் நிழவியதாக தெரிகிறது.
 
அதே சமயம், அந்த நிருவன நிர்வாகியும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் அப்பாவி என்று நிரூபிக்க டி.என்.ஏ. சோதனைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.