வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (16:38 IST)

பதற்றமான சூழலை சமாளிக்க தோனியை தேடி சென்று அறிவுரை பெற்ற ஸ்மித்! (வீடியோ இணைப்பு)

பதற்றமான சூழலை சமாளிக்க தோனியை தேடி சென்று அறிவுரை பெற்ற ஸ்மித்! (வீடியோ இணைப்பு)

10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 9 தொடர்களிலும் அணியின் கேப்டனாக களம் இறங்கிய தோனி இந்த தொடரில் முதன் முறையாக கேப்டன் பதவி இல்லாமல் சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனாக களம் இறங்கினார்.


 
 
இது தோனியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோனியின் கேப்டன்ஷிப் அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக பதற்றமான சூழலில் அணியை கூலாக வழிநடத்தி செல்வார். இதற்காக அவரை கேப்டன் கூல் என்று கூட அழைப்பார்கள்.
 
இந்நிலையில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் ஸ்மித் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் தடுமாறிய புனே தோனியின் திடீர் எழுச்சி போல அணியும் எழுச்சி பெற்றது. தொடர்ந்து மூன்றாவது வெற்றியாக மும்பை அணியை நேற்று முன்தினம் வீழ்த்தியது பூனே அணி.
 
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனே அணி 3 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்தது. ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டிய ஆகிய மும்பையின் அதிரடி பேட்ஸ் மேன்கள் களத்தில் இருக்க புனே அணி வெற்றி பெறுமா என்ற பதற்றம் நிலவி வந்தது.

 
19-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் அருமையாக வீச பதற்றக் மேலும் தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரில் புனே அணிக்கு 17 ரன் தான் தேவைப்பட்டது. களத்தில் ரோஹித் ஷர்மா, ஹர்திக் ஷர்மா நிற்க மைதானம் ஆர்ப்பரித்தது. பதற்றம் நிரம்பி வழிந்தது இரு அணியினருக்கும்
 
இந்த சூழலில் கேப்டன் கூல் என கூறப்படும் தோனியை தேடி சென்று அறிவுரை பெற்றார் புனே கேப்டன் ஸ்மித். இதனையடுத்து வீசப்பட்ட கடைசி ஓவரில் புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.