1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 15 மே 2015 (19:32 IST)

சச்சின், ஷேன் வார்னே தொடங்கும் முன்னாள் வீரர்களுக்கான டி-20 கிரிக்கெட்

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இருவரும் முன்னாள் வீரர்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.
 
இந்த தொடரில் 28 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க இருப்பதாகவும், அவர்களுக்கு ஒரு போட்டிக்கு ஊதியமாக 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 
’கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் லீக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 15 ஆட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போட்டிகள் அமெரிக்காவின் மூன்று முக்கிய நகரங்களில் 42 மாதங்கள் நடைபெறவுள்ளதாம்.
 
ஓய்வு பெற்ற வீரர்கள் பிரெட் லீ, ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், கிளென் மெக்ராத், மைக்கேல் வாகன், ஃபிளின்டாஃப், ஜாக் காலீஸ் உள்ளிட்டோர் விளையாட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.