வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (10:13 IST)

கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் மதிக்க வேண்டும்: யுவராஜ் சிங் வேண்டுகோள்

விராட்கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை கிரிகெட் ரசிகர்கள் மதிக்க வேண்டும் என்று இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அரை இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
 
இந்நிலையில், விராட் கோலியையும், அவரது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவையும் ரசிகர்கள் கண்டபடி திட்டி தீர்த்தனர். வலைதளங்களில் இது குறித்த செய்திகள் அதிகமாகப் பரவியது.
 
மேலும், அவர்களது உருவப்படமும் சில இடங்களில் எறிக்கப்பட்டன. இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பதிவில் கூறயிருப்பதாவது:-
 
"இந்திய வீரர் விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் மதிக்க வேண்டும். ஆஸ்திரேலியா தொடரில் 5 சதங்கள் எடுத்த விராட் கோலி அவரது ரசிகர்களால் மதிக்கப்படுவதற்கு தகுதி உடையவரே.
 
அவர் வரும் ஆட்டங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவார்"  இவ்வாறு யுவராஜ் சிங் கூறியுள்ளார்.