வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 2 நவம்பர் 2016 (20:27 IST)

தோனியை நீக்கினால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: கேரி கிறிஸ்டன் எச்சரிக்கை!

தோனியை நீக்கினால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: கேரி கிறிஸ்டன் எச்சரிக்கை!

இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். சமீப காலமாக தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விராட் கோலியை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.


 
 
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்கி இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரும் தவறு செய்ய உள்ளது.
 
தோனியை நீக்கினால் அதற்கான விளைவுகளை இந்திய அணி நிச்சயம் சந்திக்கும், அவர் அடுத்த உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியின் கேப்டனாக இருப்பதே சிறந்ததாகவும் என கூறிய கிறிஸ்டன் நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் தோனி மிகச்சிறந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
 
கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக இருந்த போது தான் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.