வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (07:22 IST)

ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில்  பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.


 
 
மூன்று போட்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகித்தன. இந்நிலையில் கோப்பையை உறுதி செய்யும் மூன்றாவது மற்றும் கடை ஒரு நாள் போட்டி ஹராரேயில் நேற்று நடைபெற்றது.
 
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஜிம்பாவேவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் நிதானமாக விளையாடினர்.
 
அதிகபட்சமாக அந்த அணி வீரர் முட்டம்பாமி 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 161 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி ஆட்டமிழந்தது.
 
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியது. 34 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.