வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2015 (08:06 IST)

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: மனம் திறந்தார் சேவாக்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.


 
 
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்த மட்டில் வீரேந்திர சேவாக்குக்கு முன்பு, சேவாக்குக்கு பின்பு என்று வரைமுறைப்படுத்திக் கூறலாம். இதற்கு அவர் தகுதியானவரும் கூட...
 
சச்சின் மட்டுமே கோலோச்சிய காலத்தில், தனது ருத்தர தாண்டவத்தால் ரசிகர்களை பரவசப்படுத்திய சேவாக் எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பணமாக திகழ்ந்தவர்.
 
தனது மாயாஜால பேட்டால் பந்துகளை துவம்சம் செய்த சேவாக், அவுட் ஆப் பாஃர்ம் காரணமாக நீண்ட காலமாக  இந்திய  அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
 
இதனிடையே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து சேவாக் ஓய்வு பெறப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சேவாக், தாம் ஓய்வு பெறுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும், ஓய்வு குறித்து தாம் அளித்த பேட்டியை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டன என்றும்  சேவாக் விளக்கம் அளித்துள்ளார்.