வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2015 (09:39 IST)

இந்திய அணியில் பிளவு இல்லை - சவுரவ் கங்குலி

நமது இந்திய அணியில் எவ்வித மோதலோ கருத்து வேறுபாடோ ஏதும் ஏற்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி கூறியுள்ளார். 
இந்திய அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் கோலி தலைமையிலான டெஸ்ட் தொடர் டிரா ஆனாது. பின்னர் கேப்டன் தோனியின் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகள் அரங்கேறியது. இதில் வங்க தேச அணி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. 
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி மீதும் கேப்டன் தோனியின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இந்திய அணியில் ஒற்றுமை இல்லை என ஒரு தரப்பு கருத்தும் நிலவி வருகிறது. 
 
இந்நிலையில் இச்சூழல் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணி தோல்வி பாதையில் செல்லும் போது இது போன்ற சில சர்ச்சைகள் அரங்கேறிவிடுகின்றன. வீரர்கள் களத்தில் முழு திறமையை பிரதிபலிக்காததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணியில் எவ்வித மோதலும் இல்லை என கூறியுள்ளார்.