வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Lenin AK
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2014 (20:36 IST)

ராகுல் டிராவிட்டை முந்தினார் கேப்டன் தோனி

இன்று (17.10.14) வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங்  தோனி உள்நாட்டுப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில், டிராவிட்டை பின்னுக்கு தள்ளி 2 ஆவது இடத்தைப் பிடித்தார்.
 
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் தொடர், இன்று தர்மசேலாவில் நடைபெற்று வருகிறது. இன்றையப் போட்டிகளில் தோனி மேற்கொண்டு 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உள்நாட்டில் அதிகமாக ரன் குவித்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளினார்.
 
ஒட்டுமொத்தமாக சச்சின் டெண்டுல்கர்  6976 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். டோனி 3407 ரன்கள் குவித்து 2 ஆவது இடத்திலும், ராகுல் திராவிட் 3406 ரன்கள் குவித்து 3 ஆவது இடத்தில் உள்ளார்கள்.
 
இன்று நடைபெறும் போட்டி தோனிக்கு 250 ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப் போட்டிகளில் விளையாடியுள்ள விக்கெட் கீப்பர்களின் பட்டியலிலும் டோனி 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சங்ககரா (336), மார்க் பவுச்சர் (294), ஆடம் கில்கிறிஸ்ட் (282) ஆகியோருக்கு அடுத்தப்படியாக தோனி உள்ளார்.