வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (18:34 IST)

ஹோட்டல் அறையில் பேய் - பயத்தில் மிரளும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து அணியோடு டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் வேளையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் தங்கி இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் விசித்திரமான பேய் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, இந்திய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருவதால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் லண்டனில் உள்ள பிரபல லாங்காம் ஹொட்டலில் தங்கியுள்ளனர்.
 
இந்த ஹோட்டலில் இரவு நேரங்களில் விசித்திரமான விஷயங்கள் நடப்பதாக இங்கிலாந்து வீரர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது பற்றி இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் கூறுகையில், தான் இந்த ஹோட்டல் அறையில் தனது காதலி பேலேயுடன் தங்கியிருந்த போது, இரவு நேரத்தில் திடீரென குளியலறை குழாய் திறந்து தண்ணீர் கொட்ட ஆரம்பித்ததாகும், தூங்க முடியாத அளவிற்கு அறை சூடாக மாறியதாகவும், விளக்கைப் போட்டப்பிறகு தண்ணீர் கொட்டும் சத்தம் தானாக நின்றதாகவும், விளக்கை அனைத்தபிறகு மீண்டும் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  
 
இதனால் பயந்து போன அவர், அறையை மாற்றித்தருமாறு கேட்டுள்ளார்.
 
அதே போல் ஒரு நாள் நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென கண் விழித்து பார்த்த போது அறையில் வேறு யாரோ இருப்பது போன்ற உணர்வு தன்னை பயப்பட வைத்ததாக தெரிவித்த அவர், இந்த காரணத்தினால் மொயீன் அலியின் மனைவியும் அவருடன் ஹோட்டலில் தங்க மறுப்பதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.