வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 2 ஜூன் 2014 (16:28 IST)

மற்ற கேப்டன்களை காட்டிலும் கம்பீர் அபாரமாக செயல்பட்டார் - வாசிம் அக்ரம்

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் 2-வது முறையாக கோப்பையை வென்ற கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் மற்ற கேப்டன்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டார் என்று வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.
"ஒரு அணியின் கேப்டன் அபாரமாக ஆடுவது என்பது அந்த அணிக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும். கம்பீர் அணியை நன்றாக வழிநடத்திச் சென்றார். இந்த ஐபிஎல். கிரிக்கெட் தொடரில் சிறந்த கேப்டன் கம்பீர்தான்" என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 11-வது ஓவர் முதல் 15-வது ஓவர் வரை மற்ற கேப்டன்கள் ரன் கொடுக்காமல் பந்துகளை வீசுவதில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் கம்பீர், தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்க பவுலர்களை ஊக்குவித்து வந்தார். ஆக்ரோஷமான மனநிலை மற்றும் தன் வீரர்களிடத்திலிருந்த திறமைகளில் சிறந்தவற்றை வெளிக்கொண்டுவந்த கம்பீர் இந்தத் தொடரின் சிறந்த கேப்டன் என்றும் வாசிம் அக்ரம் கூறினார்.