செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜூன் 2018 (13:12 IST)

கோலியின் காதை சேதப்படுத்திய ரசிகர்கள்!

டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சத்தியில் வைக்கபட்டுள்ள இந்திய கேப்டன் விராட் கோலியின் சிலை ரசிகர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்தியா அணியின் ரன் மேஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து தரப்பிலான சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். இவரது அசாதாரண திறமையால் கடந்த 2016ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
 
இவரை சிறப்பிக்கும் வகையில் டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சத்தியில் இவருக்கு நேற்று முன்தினம் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.
 
இந்நிலையில், இவரது சிலையின் காது பகுதி நேற்று சேதமடைந்துள்ளது. அந்த அருங்காட்சியத்திர்க்கு அதிகமாக ரசிகர்கள் வந்திருந்த போது கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததே சிலையின் காது பகுதி சேதமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.