1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 10 ஜூன் 2015 (15:50 IST)

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி: மழையால் பாதிப்பு

வங்கதேசத்திற்கு எதிராண டெஸ்ட் போட்டி மழை குறுக்கீடு காரணமாக சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் தவான் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் இரு வீரர்களும் சேர்ந்து பொறுப்புடன் விளையாட அணியின் ரன் வேகம் சற்று அதிகரித்தது. தொடர்ந்து அசத்திய தவான் அரை சதத்தை கடந்தார். இவருக்கு உறுதுணையாக விஜய்யும் ரன் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆட்டத்தின் 23.3 ஓவரில் 107 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. களத்தில் தவான் 74 ரன்னிலும், முரளி விஜய் 33 ரன்னிலும் அவுட்டாகாமல் உள்ளனர்.