வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 17 அக்டோபர் 2015 (11:40 IST)

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4 ஆவது ஒருநாள் போட்டி: விடிய விடிய காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள்

இம்மாதம் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.
 
5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்காட்டில் நடைபெறவுள்ளது.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆவது ஒருநாள் போட்டி இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 9 மணிக்கு தொடங்கியது. 750 ரூபாய் முதல் 7,500 வரை விற்கப்படும் டிக்கெட்டுகளை பெறுவதற்காக நேற்று இரவு 10 மணி முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து இந்த டிக்கெட் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.