1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (19:06 IST)

இந்திய அணி 319 ரன்கள் குவிப்பு

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் உள்ள பி. சாரா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரகானே 4 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ராகுலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 107 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது.

அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கிய ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பின்னி 10 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

6-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் சஹா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா அரைசதத்தை பதிவு செய்தார். 88-வது ஓவரில் ரோகித் சர்மா அவுட் ஆனார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நேர இறுதியில் இந்தியா 37.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது.