வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 20 நவம்பர் 2014 (06:20 IST)

தியோதர் டிராபி கிரிக்கெட்: எங்களை தேர்வு செய்ய வேண்டாம் என ஷேவாக், கம்பீர் கோரிக்கை

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான தியோதர் டிராபி போட்டியில் தங்களது பெயர்களை பரிசீலிக்க வேண்டாம் என முன்னாள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 
 
நமது இந்திய அணியிலிருந்த தொடக்க ஆட்டக்காரர்களான ஷேவாக், கம்பீர் ஆகிய இருவரும் அவுட் ஆப் ஃபார்ம் காரணமாக தங்களது இடத்தை இழந்தனர். எனினும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் இவர்கள் அதிலும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. 
 
இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான தியோதர் டிராபியின் வடக்கு மண்டல அணி தேர்வு நடக்கிறது. இதில் தங்களது பெயர்களை  சேர்க்க வேண்டாம் என்று ஷேவாக், கம்பீர்  தெரிவித்துள்ளனர்.