வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (18:22 IST)

இந்­திய கிரிக்கெட் வாரியத்தை சுத்தம் செய்வதே முதல் பணி - புதிய தலைவர் மனோகர்

இரண்டு மாதத்தில் இந்­திய கிரிக்கெட் வாரியத்தை சுத்தம் செய்வேன் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலை­வ­ராக தேர்வு செய்யப்பட்ட ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.
 

 
இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு வாரியத்தின் தலை­வ­ராக இருந்த ஜக்மோகன் டால்­மியா கடந்த 20ஆம் தேதி மர­ண­ம­டைந்தார். இதனை தொ­டர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலை­வரை தேர்ந்து எடுப்பதற்­காக சிறப்பு பொதுக்­குழு கூட்டம் ஞாயிற்­றுக்­கி­ழமை நடைபெற்றது.
 
இந்த கூட்­டத்தில் இந்­திய கிரிக்கெட் சபையின் புதிய தலை­வ­ராக ஷசாங் மனோகர் ஒரு­மனதாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். நாக்­பூரை சேர்ந்த ஷசாங் மனோகர் தற்­போது இரண்டா­வது முறை­யாக கிரிக்கெட் வாரியத்தின் தலை­வ­ரா­கிறார்.
 
இதற்கு முன்­ன­தாக, 2008ஆம் ஆண்­டி­லி­ருந்து 2011-ஆம் ஆண்டு வரை அவர் தலை­வ­ராக பணி­யாற்­றி­ உள்ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
 
பத­வி­யேற்ற பிறகு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய மனோகர் “என்னுடைய முதல் நட­வ­டிக்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதுள்ள தவறான பிம்­பத்தை மாற்றி, ரசி­கர்­க­ளிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்­ப­டுத்­து­வது தான்.
 
என்­னு­டைய திட்­டங்­களை அமுல்­ப­டுத்தி கிரிக்கெட் வாரியத்தை தூய்மைப்­ப­டுத்த இரண்டு மாதம் அவ­காசம் கேட்டுள்ளேன். இரண்டு மாதத்திற்கு பிறகு எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.