செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (19:33 IST)

”ஆரம்பத்தில் முதல்தர கிரிக்கெட் கடினமாக இருந்தது” - குமார் சங்ககரா

17 ஆண்டுகளுக்கு முன் முதல்தர கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைப்பது கடினமாக இருந்தது என்று இலங்கை வீரர் சங்ககரா கூறியுள்ளார்.
 

 
இலங்கை வீரர் குமார் சங்ககரா இந்தியாவுடனான டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெற இருக்கிறார். இந்நிலையில், இது தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “நான் நான் கிரிக்கெட் ஆடத்தொடங்கிய காலத்தில் இப்போதிருப்பதை விட நிறைய போட்டிகள் இருந்ததாக நினைக்கிறேன்.
 
அப்போது தரம் வாய்ந்த வீரர்கள் ஒரே அணியில் நிறையபேர் இருந்தார்கள். இப்போது அது குறைவான அளவிலேயே இருக்கிறது. இப்போது என்ன விடுபட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு நிச்சயமாக தெரியும் கிளப் கிரிக்கெட்டில் மிகக் கடினாமாகவும், தீவிரத்தொடுதான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன்.
 
மூத்த வீரர்கள் உதவ வேண்டும் அணிக்கு உதவ வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அவர்கள் வந்து பயிற்சியிலோ, ஒய்வறையிலோ நேரத்தை செலவிட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்ய முடியும். நாங்கள் அனைவரும் அதனை செய்ய தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.