வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2015 (11:21 IST)

எல்லியாட் அசத்தல் அரைச்சதம்; நியூசிலாந்து நிதான ஆட்டம்

உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிராண்ட் எல்லியாட் சிறப்பாக ஆடி அரைச்சதம் அடித்துள்ளார்.
 
உலக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
 
அரைச்சதம் எடுத்த கிராண்ட் எல்லியாட்
அதன்படி முதலில் மார்டின் கப்திலும், பிரண்டன் மெக்கல்லமும் களமிறங்கினர். மெக்கல்லம் சந்தித்த 2ஆவது பந்தை அடித்து ஆட முயற்சித்தார். ஆனால், ஸ்டார்க் அற்புதாமாக அதை லெக் சைடில் வீசி கட்டுப்படுத்தினார். ஆனால் அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
 
முதல் ஓவரிலேயே அவுட்டானது அதிர்ச்சிகரமாக அமைந்தது. 3 ஓவர்களுக்கு 11 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பின்னர் மார்டின் கப்திலும் 15 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக வில்லியம்சனும், ஜான்சன் பந்துவீச்சில் ஜான்சனிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
இதனால், 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இந்நிலையில், ராஸ் டெய்லரும், கிராண்ட் எல்லியாட்டும் ஆஸியின் முரட்டு பந்துவீச்சிற்கு ஈடு கொடுத்து ஆடினர். சிறப்பாக ஆடிய எல்லியாட் 51 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 50 ரன்கள் எடுத்தார். 33 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.