வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 18 மே 2016 (12:39 IST)

’சச்சினுடன் ஒப்பிடுவது சங்கடமாக இருக்கிறது’ - விராட் கோலி

சச்சின் டெண்டுல்கருடன் தன்னை ஒப்பிடுவது, தனக்கு சங்கடமாக இருப்பதாக இந்திய வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
 

 
27 வயதான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆச்சர்யமளிக்கும் வகையில் பல அபாரமான பல சாதனைகளை புரிந்து வருகிறார். இன்னும், மேற்கொண்டு பல சாதனைகளை படைக்க வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
 
அதேபோல், ஐபிஎல் போட்டிகளிலும், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இந்த சீசனிலும் 12 ஆட்டங்களில் விளையாடி 3 சதங்கள், 5 அரைச்சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார்.
 
இதனால், அவர் பலமுறை இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். ஏன், கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேன் கூட, கோலியை சச்சினுடன் ஒப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், தன்னை சச்சினுடன் ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என்று விராட் கோலி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நேர்மையாக சொல்வதென்றால், எனக்கு இது சங்கடத்தை உண்டாக்குவதாக உணர்கிறேன். சச்சினை வேறு எவருடனும் ஒப்பிட முடியாதவர்.
 
ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது சரியானவை இல்லை என்பது எனது முடிவு. அவர், நான் அண்ணாந்து பார்க்கும் இடத்தில் உள்ளார். ஆனால், நான் நானாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர், எனக்கு இன்னும் உத்வேகத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.