வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2016 (20:53 IST)

தோனியின் கிண்டல் பேச்சு!

இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.


 


இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த இந்த போட்டி குறித்து, தோனி கூறியதாவது,”இங்கு போதுமான அளவு உபகரணங்கள் இல்லை, சூழ்நிலையும் மிக மோசமாக இருக்கிறது, இந்த நிலை முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை என நடுவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறேன்.

என் அனுபவத்தில் இது போன்ற மோசமான சூழ்நிலையில் பல முறை விளையாடி இருக்கிறேன். எல்லாமே நடுவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான். ஆடுகளம் சரிவராது என்று அவர்கள் நினைத்து விட்டால் அந்த ஆடுகளம் தகுதியற்றதாகி விடும்.” என்று கிண்டலாக கூறினார்.