வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 21 ஜூலை 2016 (09:49 IST)

கிரிக்கெட் வீரர் மைதானத்தில் அடித்துக் கொலை

டெல்லியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட் மைதானத்திலேயே அடித்துக் கொல்லப்பட்ட சமபவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
டெல்லியில் 20 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் அங்குள்ள மர்ம நபர்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த வீரர் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த போது அங்கு நுழைந்த அந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
 
மர்ம நபர்களின் கடுமையான தாக்குதலால் அந்த கிரிக்கெட் வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.