வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 18 செப்டம்பர் 2014 (13:58 IST)

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரிட்சை

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் –ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மொகாலியில் மோதவுள்ளன.

6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் செப், 17 இல் தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்நிலையில் இன்று மொகாலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்தாண்டு நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் 2 ஆவது இடத்தை பிடித்து தங்கள் அணியின் சிறந்த பங்களிப்பை தந்துள்ளது.

மேலும் மேக்ஸ்வெல், ஷேவாக், பெரேரா போன்ற அதிரடி வீரர்கள் இவ்வணியில் இருப்பது கூடுதல் சிறப்பு. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி டிம் பெய்ன் தலைமையில் விளையாடவுள்ளது. இவ்வணியில் பாகிஸ்தான் ஆல்–ரவுண்டர் சோயிப் மாலிக் அங்கம் வகிக்கிறார்.

மேலும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் குறித்து ஹோபர்ட் அணியின் பயிற்சியாளர் டேமியன் ரைட் கூறுகையில், ‘உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கு நாங்கள் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள் உள்ளனர்’ என்றார்.