வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (10:24 IST)

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி: 54 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில், நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் டால்பின்ஸ் அணியை தோற்கடித்தது.
 
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரில் நடைபெற்ற 8 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டால்பின்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
 
இதில் டாஸ் வென்ற டால்பின்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது இன்னிங்சை தொடங்கினர்.
 
இதில், வெய்ன் சுமித் 7 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், பின்னர் இணைந்த ரெய்னா, மெக்கல்லம் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். 
 
ரெய்னா, சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், பிரைலிங் பந்து வீச்சில் அவுட் ஆனார். 
 
90 ரன்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். இம்முறை கேப்டன் தோனி டக்-அவுட் ஆகி மிகவும் ஏமாற்றம் அளித்தார். இறுதியில் 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 242 ரன்கள் குவித்தது.
 
இதைத் தொடர்ந்து கடின இலக்கை எதிர்க்கொண்டு ஆடிய டால்பின்ஸ் அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. பின்னர் டால்பின்ஸ் அணியின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.
 
இறுதியில் டால்பின்ஸ் அணி 188 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 54 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 
ரெய்னா செப், 22 ல் நடந்த போட்டியில் 67 ரன்களை எட்டிய போது அனைத்து வகையான 20 ஓவர் போட்டியிலும் சேர்த்து 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.