வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 22 செப்டம்பர் 2014 (12:01 IST)

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் – டால்பின்ஸ் அணிகள் பலப்பரிட்சை

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டால்பின்ஸ் அணிகள் பெங்களூரில் மோதுகின்றன.
 
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் செப், 17 அன்று தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
 
இந்நிலையில் செப், 22 ( இன்று ) பெங்களூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டால்பின்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
 
செப் 17 அன்று நடந்து முடிந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
 
ஆதலால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாகத் திகழும் சென்னை அணியில் தோனி, ரெய்னா, பிராவோ ஆகிய வீரர்கள் இன்றும் தங்கள் முழுத் திறமையை வெளிபடுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
 
மோர்னே வான் விக் தலைமையிலான டால்பின்ஸ் அணியும் தொடக்க ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர் அணியிடம் தோற்றது. கடைசி இரண்டு பந்தில் 2 சிக்சரை விட்டுக் கொடுத்ததால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பறிபோனது.
 
இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை காண ரசிகர்கள் மிக எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.