வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 25 செப்டம்பர் 2014 (19:28 IST)

சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ்-லாகூர் லயன்ஸ் பலப்பரிட்சை

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லாகூர் லயன்ஸ் ஆகிய அணிகள் பெங்களூரில் மோதவுள்ளன.
 
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்நிலையில் செப், 25 ( இன்று ) பெங்களூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லாகூர் லயன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
 
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 3 விக்கெட்டில் தோற்றது. மேலும் 2 ஆவது ஆட்டத்தில் டால்பின்ஸ் அணியை 54 ரன்னில் வென்றது.
 
அரை இறுதி வாய்ப்பில் இருக்க சென்னை அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டும். 
கடந்த ஆட்டத்தில் ரெய்னா, மேக்குல்லம், ஜடேஜா ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை.
 
முகமது ஹபீஸ் தலைமையிலான லாகூர் லயன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 4 விக்கெட்டில் தோற்றது. இதனால் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது  லயன்ஸ் அணி. 
 
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி செப், 24 (நேற்று) ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்சை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறியது.