1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (15:38 IST)

வீட்டு பிரியாணிக்கு தடை: ஓட்டலை விட்டு வெளியேறினார் தோனி

வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை ஓட்டலுக்குள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, அணியினருடன் ஓட்டலை விட்டு வெளியேறியுள்ளார்.
 
வீரர்கள் தங்குவதற்கு ஓட்டல் அறைகளை ஒப்பந்தம் செய்வது வழக்கமான செயல்தான். இதில் ஓட்டல் கிரண்ட் காகாதியாவில் சென்னை அணி வீரர்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில் மும்பை வீரர் அம்பத்தி ராயுடு, வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை தோனிக்கு கொடுத்து அனுப்பினார். ஆனால் இதற்கு அனுமதி அளிக்க ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது.
 
இதனால் கோபம் அடைந்த கேப்டன் தோனி, ஓட்டல் புக்கிங்கை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். இது குறித்து ஓட்டல் நிர்வாகம் கூறுகையில், வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளுக்கு ஓட்டல்களில் அனுமதி இல்லை என்ற போதிலும், வீரர்களுக்காக நிர்வாகம் பரிசீலனை செய்தது. 
 
ஆனால் புக் செய்த அறையை மாற்றியே ஆக வேண்டும் என தோனி திட்டவட்டமாக கூறினார், என்று ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.