1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : சனி, 28 மார்ச் 2015 (19:08 IST)

”இந்திய ரசிகர்கள் தங்களது பேராதரவை எங்களுக்கு தர வேண்டும்” - மெக்கல்லம் கடிதம்

உலக கோப்பை இறுதி போட்டியில், இந்திய ரசிகர்கள் தங்களது பேராதரவை எங்களுக்கு தர வேண்டும் என்று நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
உலக கோப்பை இறுதி போட்டியில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள்  நாளை மெல்போர்னில் மோத உள்ளன. இந்நிலையில் நியூசிலாந்தின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், இந்திய ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”நாங்கள் உலகக்கோப்பை பசியோடு இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய ரசிகர்களின் ஆதரவு நியூசிலாந்துக்குதான் கிடைக்கப்போகிறது என்பது தெரிய ஆரம்பித்துள்ளது. இந்திய ரசிகர்களின் ஆதரவை  நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். நன்றி. என்று கூறியுள்ளார்.

மெக்கல்லம் எழுதியுள்ள கடிதம்

மேலும், ’இறுதிப் போட்டியின் ஒவ்வொரு பந்திற்கும் எந்த வழிகளெல்லாம் முடியுமோ, அவ்வறெல்லாம் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.