வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2015 (11:00 IST)

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொலை மிரட்டல்

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு ரன்வீர்சிங் என்ற நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இளம் வேகப்பந்து வீச்சின் அடையாளமாய் உருவெடுத்து வரும் புவனேஷ்வர் குமார் எதிர்கால இந்திய அணியின் மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். இவரின் வசிப்பிடம் மீரட் ஆகும். இந்நிலையில் புவனேஷ்வர் குமாரின் தந்தை ரன்வீர்சிங் என்ற நபரிடமிருந்து நிலம் வாங்கியுள்ளார். இதற்கான உரிய தொகை இண்டர்நெட் பேங்கிங் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து ரன்வீர்சிங் சம்மந்தப்பட்ட நிலத்தை புவனேஷ்வர் குமாரின் தந்தை பெயருக்கு மாற்றிகொடுக்க வேண்டும். இதை ரன்வீர்சிங் செய்ய மறுத்ததால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. பணத்தை திருப்பி தராமலும் ரன்வீர்சிங் தகராறு செய்துள்ளார்.
 
மேலும் ரன்வீர்சிங்  புவனேஷ்வர் குமாரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ந்து போன புவனேஷ்வரின் குடும்பம் உடனே காவல்துறையினருக்கு புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ரன்வீர்சிங் மற்றும் சம்மந்தப்பட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.