வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (20:49 IST)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவர் மனோகர் ஷஷாங்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வரிய தலைவருக்கான தேர்வு வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அணுராக் தாக்கூர், இந்திய கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் அக்டோபர் 4ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய நிலவரப்படி, காலியாக இருக்கும் தலைவர் பதவிக்கு நாக்பூரை சேர்ந்த மனோகர் ஷஷாங்-ஐ ஒருமனதாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 
 
ஒருவேளை, தலைவர் பதவிக்கு வேறு யாராவது போட்டியிட்டால் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். அப்படி, தேர்தல் நடந்தால் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் அந்த தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் அணுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.
 
இதற்கிடையில், மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத்பவாரை கடந்த வியாழக்கிழமை என்.சீனிவாசன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் ஒரு மணி நேரம் மேலாக புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசித்துள்ளனர். சரத்பவார் ஆதரவுடன்  கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்ற அவரை என்.சீனிவாசன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.