வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 மார்ச் 2018 (18:43 IST)

முத்தரப்பு ஐந்தாவது டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

நிதாஸ் டிராபி முத்தரப்பு ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா- வங்காளதேசம் மோதுகின்றன. இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி முதல் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
 
இன்று இந்தியா- வங்காளதேசம் இடையேயான ஐந்தாவது டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று வங்காளதேசம் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
ஏற்கனவே வங்காளதேசம் அணி இந்தியாவுடன் மோதிய இரண்டாவது டி20 போட்டியிலும் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.