வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2015 (13:28 IST)

பெங்களூரு டெஸ்ட்: மழை காரணமாக இன்றைய ஆட்டம் ரத்து

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


 
 
ஏற்கனவே மழையால் 2 ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது இந்நிலையில் மழை நீடித்து வருவதால் இன்றைய 3 ஆம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
 
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி வீசப்பட்ட 59 ஓவர்களில் 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 22 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 28, ஷிகர் தவன் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
 
இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் மழை மேலும் தொடர்வதால் இந்த டெஸ்ட் போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.