வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (12:07 IST)

சூடான அஸ்வின்; தவித்த நடுவர்கள் (வீடியோ)

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் திண்டுக்கல்-சேப்பாக்கம் ஆகிய அணிகள் இடையே நடந்த போட்டியில் சர்வதேச கிரிக்கெட் வீரர் அஸ்வின்களத்தில் கோபம் அடைந்ததால் நடுவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.


 

 
கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பெற்ற போட்டியில் திண்டுக்கல் அணியும் சேப்பாக்கம் அணியும் மோதியது. சர்வதேச கிரிக்கெட் வீரர் அஸ்வின் சேப்பாக்கம் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
திண்டுக்கல் அணியின் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பந்தில் சேப்பாக்கம் அணியின் வீரர் ஜெகதீசன் அவுட்டாக, சாய் கிஷோர் அவரிடம் வம்பிழுக்க, களத்தில் அஸ்வின் கோபமடைந்து கிஷோரிடம் மோதலுக்கு தாயாராகி விட்டார். 
 
திண்டுக்கல் அணியின் மற்ற வீரர்கள் அஸ்வினை சமாதானம் செய்தனர். நடுவர்கள் என்ன செய்வது தெரிமால் திகைத்துபோய் நின்றனர்.

 
நன்றி: T-Rex