1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 7 பிப்ரவரி 2015 (15:03 IST)

உலக கோப்பை கிரிக்கெட்: பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது.
 
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில தினங்களீல் தொடங்கவுள்ளது. இப்போட்டிகள் வரும் பிவ், 14 முதல் தொடங்கி மார்ச்  29  வரை நடைபெறவுள்ளது.

உலக கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக  14 பயிற்சி ஆட்டங்கள் நாளை முதல் தொடங்கி13 ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி நாளை பிப், 8 ஆஸ்திரேலியாவுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்காண டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.