1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2017 (11:53 IST)

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் மாற்றம்: ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5  ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 4-0 என்ற கணக்கிலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1  என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

 
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது.  இதில் முதலாவது 20 ஓவர் போட்டி கான்பூரில் 26-ந் தேதியும், 2-வது போட்டி நாக்பூரில் 29-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20  ஓவர் போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 1-ந் தேதியும் நடக்கிறது.
 
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியின் மாற்றம் குறித்து அணி நிர்வாகத்தினருடன்  ஆலோசனை நடத்திய தேர்வு குழுவினர் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின்,  ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா,  பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.