1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 ஜூன் 2018 (14:07 IST)

டி20 தொடர்: வங்காளதேசத்தை வொயிட் வாஷ் செய்தது ஆப்கானிஸ்தான் அணி

இந்தியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் வாங்காளதேச அணியை ஆப்கானிஸ்தான் வொயிட் வாஷ் செய்துள்ளது.
 
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடந்த முதல் போட்டியிலும், இரண்டாவது போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
 
இந்நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் 3வது டி20 தொடர் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 6 வீக்கெட் இழப்பிறகு 145 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சாமிமுல்லா ஷேவாரி 33 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் அணி சார்பில் நஸ்முல் இஸ்லாம் மற்றும் அபு ஜயத் தலா 2 வீக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவரில் 6 வீக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 46 ரன்கள் எடுத்தார்.
 
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்காளதேச அணியை வொயிட் வாஷ் செய்தது.