வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (11:30 IST)

டால்மியாவை வரவேற்க நள்ளிரவு வரை காத்திருந்த குழந்தைகள்

கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டால்மியாவை வரவேற்பதற்காக அழைக்கப்பட்டு வந்த குழந்தைகளை, நள்ளிரவு வரை  காத்திருக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்மோகன் டால்மியா நேற்றிரவு கொல்கத்தாவிற்கு வருகை தந்தார். அவரை கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்க டால்மியாவின் நண்பர் ஒரு அறக்கட்டளையிலிருந்து சுமார் 50 அனாதை குழந்தைகளை வரவழைத்துள்ளார். இந்நிலையில் டால்மியாவை வரவேற்க அந்த குழந்தைகள் அனைத்தும் சுமார் இரவு 11.30 மணி வரை  பூங்கொத்துகளுடன் காத்திருந்துள்ளனர்.
 
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து  வருகின்றனர்.