வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (18:42 IST)

4 ஆவது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து 206 ரன்கள் குவித்தது

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கான 4 ஆவது ஒரு நாள் போட்டி இன்று செப்டம்பர் 2 ஆம் தேதி பர்மிங்காமில் நடக்கவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.
 

 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து இன்னிங்சை குக் மற்றும் ஏல்ஸ் தொடங்கினர். இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.  ஏல்ஸ் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் போல்ட் ஆக்கினார். பின்,கேப்டன் குக்கும்  9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த பேல்லன்ஸ் ஷமியின் பந்துவீச்சில் பலியானார். 10 ஓவர் முடிவதற்குள் இங்கிலாந்து அணி 3  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய  இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 49.3 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. 

ஒரு நாள் போட்டிகளில் இதுவரை இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்ற இந்தியா இன்று தனது ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.