1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (15:10 IST)

முரளி விஜய்யின் பொறுப்பான சதம்: இந்தியா 259/4

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முரளி விஜய் அந்நிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்தார். இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் அடித்துள்ளது.
 
இந்தியா, இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தவான் 12, புஜாரா 38, கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். மிக பொறுமையாக ஆடிய ரகானே 81 பந்தில் 32 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் தனது 4 ஆவது சதத்தை அடித்து அசத்தினார். 
 
இங்கிலாந்துக்கு எதிராகவும் அந்நிய மண்ணிலும் இவர் அடிக்கும் முதல் சதம் இது. மற்ற 3 சதங்களும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்துள்ளார்.

இந்திய அணி ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களுடன் இருந்தது. முரளி விஜய் 122,  தோனி 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்சன் 2, பிராட், பிளங்கெட் தலா 1 விக்கெட் எடுத்தனர்.