மோர் பருகக் கொடுங்கள்
தற்போது வெயில் காலம் என்பதால் குழந்தைகளுக்கு தயிரும், மோரும் அளிக்கலாம். 2 வயதுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு மோரை நன்கு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குடிக்கக் கொடுங்கள்.
மேலும் மோர் சாதமும் ஊட்டலாம். வெயிலுக்கு தயிரை விட மோர் சிறந்தது. உடல் சூட்டை கட்டுப்படுத்தும்.
மோரை வெறுமனே குடிக்க பிடிக்காத குழந்தைகளுக்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி சேர்த்து நன்கு கலக்கிக் கொடுத்தால் அதன் சுவை பிடித்துவிடும்.